Saturday, June 9, 2012

தானே


சாலைக்கு வந்த கடல்
  பாலைவனமான நெய்வேலி
புரட்டிபோடபட்ட புதுச்சேரி
  கலங்கிப் போன கடலூர்
சின்னபின்னமான சிதம்பரம்
  நடவெல்லாம் நீருகிரையான நாகை
3000 கோடி அழிவு
  46 உயிர்கள் பலி
லட்சம் மரங்கள் சாய்வு
  50000 வீடுகள் இடிந்தது
நிவாரண நிதி
  அறிவித்ததுடன்
அரசாங்கத்தின்
  கடமை முடிந்தது
ஆழ்ந்த வருத்தம்
  தெரிவித்ததுடன்
பிரதமரின் வேலை
  நிறைவுற்றது
பச்சாதாபப் பட்டதுடன்
  நம்முடைய அடுத்த
வேலை தொடங்கியது
அங்கே வீடிழந்த
  என் சகோதரன்
என்று எழுவான்?
இங்கே கடன் வாங்கி
  பயிர் செய்த விவசாயி
என்று மீளுவான்?
அடி மேல் அடி
  வாங்கும் மீனவனின்
 அடுத்த நாள் எப்படி?
தானே வந்து நாசம்
  செய்த தானே -
உன் பதில் என்ன?

No comments:

Post a Comment