Saturday, June 9, 2012

விபத்து



படகு கவிழ்ந்து 27 பேர் பலி
 
தேவைக்கு அதிகமான மக்கள்
ஏறியதால் என்ற பதில்
பஸ் விபத்தில் 32 பேர் பலி
 பேருந்து சரியான பாதையில்
செல்லவில்லை என்ற காரணம்
ரயில் விபத்தில் 127 பேர் பலி
 ஓட்டுனர் பேசிக்கொண்டே
ஓட்டியதால் என்ற விளக்கம்
யாரை குற்றம் சொல்வது
படகோட்டியின் பேராசையா?
 இல்லை அவன் சமாளிக்க
வேண்டிய விலைவாசியா?
பேருந்து ஓட்டுனரின் இயலாமையா?
 இல்லை நேரத்துக்கு சேர
வேண்டும் என்ற கட்டளையா?
ரயில் ஓட்டுனரின் அலட்சியமா?
இல்லை இன்று எத்தனை மரணம்
என்று கேட்கும் அளவு நாம்
கல்லாகி போனதின் எதிரொலியா!!!!

No comments:

Post a Comment