சில சமயங்களில் குழந்தைகள் தெய்வங்களாக தெரிவார்கள். நாம் தான் மனிதர்களாக அதை உணராமல் இருக்கிறோம்.
என் பெண்ணின் போர்வையை துவைத்து வைத்து இருந்தோம். அவள் அதை பார்த்து யார் செய்ததது என்று கேட்க, கலா பாட்டி என்று கூறினோம் (கலா எங்கள் வீட்டில் வேலை செய்பவர்). இவள் வேகமாக சென்று நன்றி கூறி விட்டு வந்தாள். எதற்கு என்று கேட்டதற்கு, போர்வைக்கு வாய் இல்லை தானே என்று பதில் வந்தது.
சின்ன ஒரு செயலில் தெய்வத்தை காட்டிய என் பெண்ணின் முன் நான் மிகவும் சிறியதாக தெரிந்தேன்.
No comments:
Post a Comment